மதுராவில் உள்ள யமுனா விரைவு சாலையில் கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா யமுனா விரைவுச்சாலையில் சனிக்கிழமை அதிகாலையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஹர்டோயில் இருந்து நொய்டாவுக்கு காரில் சிலர் வந்த திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சாலை விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளார். உயிரிழந்தவர்கள் லல்லு கௌதம் (60), அவரது மனைவி சுட்கி (55), மகன்கள் சஞ்சய் (30), ராஜேஷ் (25), நிஷா (28), நந்தினி (22), சஞ்சயின் மகன் தீரஜ் (6) என அடையாளம் காணப்பட்டனர். மேலும், லல்லு கௌதமின் மூன்றாவது மகள் கோபால் (23), சஞ்சயின் இரண்டாவது மகள் ஹர்ஷ் (3) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆக்ராவில் உள்ள எஸ்என் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த விசாரணையில் யமுனா விரைவு சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது காருக்கு முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.